கூட்டணி உருவாக்க புதிய குழு – பா.ஜ.க. அறிவிப்பால் எடப்பாடி அதிர்ச்சி! யாருடைய தலைமையில் கூட்டணி என தொண்டர்கள் குழப்பம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.9- ‘கூட்டணிக்கு நான் தான் தலைமை’ என்று எடப்பாடி கூறி வரும் வேளையில், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க அதிரடியாக பாஜக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான அணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. அதுவும் நிர்ப்பந்த கூட்டணியாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை வகிக்கிறார்.

அவருக்கு ஃபேஸ் வேல்யூ இருப்பதால், அவர் தான் கூட்ட ணிக்கு தலைமை என்று பாஜக அறிவித் துள்ளது. எந்த இடத்திலும் பாஜக தலைவர்களோ, அடிக்கடி தமிழ்நாடு வரத் தொடங்கியுள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி என்று சொல்லவில்லை. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மட்டும் கூறி வருகின்றனர். பொதுக்கூட்டத்தில் கூட அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க மறுத்து வருகின்றனர்.

இப்படி நிலைமை இருக்கும் சூழ்நிலையில் கூட்டணி உள்பட அனைத்து விவகாரத்திலும் பாஜகவின் கைதான் ஓங்கி இருக்கிறது. அந்த வகையில் தான் அண்மையில் பாமகவுடன் (அன்புமணி அணி) பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணிக்குள் இணைத்தது பாஜக. தொடர்ந்து டிடிவி. தினகரனும் இணைந்தார். அவரும் பாஜக வாயிலாக தான் கூட்டணியில் இணைந்தார். கூட்டணியில் சேர்த்தது வரை பாஜக தான் களத்தில் இறங்கி செயல்பட்டது. அந்த வகையில் தான் டிடிவி. தினகரன் டில்லி சென்று கூட்ட ணியை முடிவு செய்தார். பெயரளவுக்கு மட்டும் டிடிவி தினகரன் கூட்டணியில் இணையும் நிகழ்ச்சியில் எடப்பாடி இருந்தார். தொடர்ந்து எடப்பாடியும், டிடிவியும் ஒப்புக்கு, இணைந்தது தொடர்பாக ஒரு பேட்டியை மட்டும் கொடுத்தனர்.

ஆனால், கூட்டணியை உறுதி செய்வது என்பதில் தொடர்ந்து பாஜக தான் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தேமுதிக, பாமக(ராமதாஸ்) அணியுடன் பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகின்றது. மிகப் பெரும் வலிமையான கூட்டணியை அதிமுக தலைமையில் அமைப்போம் என எடப்பாடி சொன்னாலும், கூட்டணியை இறுதி செய்வதில் டில்லி பாஜக மேலிடத்தின் கை தான் ஓங்கி இருந்து வருகிறது. இது அதிமுகவிற்கு பின்னடை வாகவே அமைந்துள்ளது. சட்ட மன்றத் தேர்தல் என்றாலே சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகமும், போயஸ் கார்டன் இல்லத்திலும் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். ஆனால் தற்போது பாஜகவே தலைமை தாங்கி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இதை பார்த்து அதிமுக தொண்டர்கள் எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோமே என்று நொந்து போய் வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறி வரும் நிலையில், புதிதாக கட்சிகள் இந்த கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ குழுவை ஒன்றை அமைத்து பாஜக மேலும் அதிர்ச்சியை அதிமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 7.2.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பு:

வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026அய் சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமைப்பு தலைவர்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலு சேர்த்திட, பாஜக சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது.

அந்த குழுவின் தலைவராக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, துணை தலைவராக முன்னாள் டிஜிபியும் மாநில செயற்குழு உறுப்பினருமான ஜி.பாலச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

டிடிவியை கூட்டணியில் இணைக் கவே மாட்டேன் என்று எடப்பாடி பிடிவாதமாக இருந்து வந்தார். கடைசி நேரத்தில் பாஜகவின் அழுத்ததால் கூட்டணியில் டிடிவி இணைந்துள்ளார்.

அவர் இணைந்ததை அதிமுகவில் உள்ள சில தலைவர்கள், தொண்டர்கள் இன்று வரை ஏற்றுக் கொள்ளவே இல்லை. கூட்டணியில் இணைந்தாலும் அதிமுக, அமமுக தொண்டர்கள் தொடர்ந்து எதிரிக்கட்சி மாதிரியே இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது கூட்டணியை உருவாக்க பாஜக குழு அமைத்துள்ளது அதிமுக தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *