வரவேற்கிறோம்!

1 Min Read

– ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாளையே ஒப்படைத்த மாமனிதர் இளையபெருமாள் அவர்கள் பெயரில் அரசு சார்பில் நினைவு மண்டபம் சிதம் பரத்தில் அமைக்கப்படும் என்று இன்று (18.4.2023) சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கதேயாகும்!

அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து, அவரால் அளிக்கப்பட்ட அறிக்கையில், தீண்டாமை ஒழிப்புக்கு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அவசியமானது என்ற பரிந்துரையை அழுத்தமாகக் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தந்தை பெரியாரிடத்திலும், நம்மிடத்திலும், நம் இயக்கத்தின்பாலும் சாலப் பரிவும், மதிப்பும் கொண் டவர். பொதுவாழ்வின் மாமணியாக ஜொலித்த நல்லார்க்கு நல்லதோர் நினைவுச் சின்னத்தை- எதையும் செய்யவேண்டிய ஒன்றைத் தவறாது காலத்தாற் கடமை உணர்வுடன் ஆற்றக்கூடிய மாண்பமை ஆட்சியாளர் நமது முதலமைச்சர் என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!

– கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *