“ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா” திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்: அதிர்ச்சி தகவல்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பதி, ஏப். 18- போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி திருமலை-திருப் பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட் பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை காவல்துறையில் புகார் செய்தார். 

திருமலை-திருப்பதி தேவஸ்தானத் தில் பக்தர்களுக்கான தரிசன சீட்டுகள், ஆர்ஜித சேவை சீட்டுகள், அங்கப் பிர தட்சண டோக்கன்கள் வெளியீடு, விடுதி களில் அறைகள் ஒதுக்கீடு, இ-உண்டியல் காணிக்கை, சிறீவாரி சேவா சங்க தொண் டர்கள் முன்பதிவு செய்தல் ஆகியவை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப் படுகிறது.ஒருசிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணைய தள முகவரியை தொடங்கி, அதன் மூலம் திருமலையில் சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறோம், தேவஸ்தான விடுதிகளில் அறைகளை ஒதுக்கீடு செய்து தருகிறோம், தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருகிறோம், எனக் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு வதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறைக்கு ஏராள மான புகார்கள் வந்தன.

அதன்பேரில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் செயல்பட்டு வந்த 40 போலி இணையதள முகவரிகளை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி திருமலை-திருப்பதி தேவஸ் தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை காவல் துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *