“ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா” திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்: அதிர்ச்சி தகவல்!

Viduthalai
1 Min Read

திருப்பதி, ஏப். 18- போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி திருமலை-திருப் பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட் பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை காவல்துறையில் புகார் செய்தார். 

திருமலை-திருப்பதி தேவஸ்தானத் தில் பக்தர்களுக்கான தரிசன சீட்டுகள், ஆர்ஜித சேவை சீட்டுகள், அங்கப் பிர தட்சண டோக்கன்கள் வெளியீடு, விடுதி களில் அறைகள் ஒதுக்கீடு, இ-உண்டியல் காணிக்கை, சிறீவாரி சேவா சங்க தொண் டர்கள் முன்பதிவு செய்தல் ஆகியவை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப் படுகிறது.ஒருசிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணைய தள முகவரியை தொடங்கி, அதன் மூலம் திருமலையில் சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறோம், தேவஸ்தான விடுதிகளில் அறைகளை ஒதுக்கீடு செய்து தருகிறோம், தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருகிறோம், எனக் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு வதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறைக்கு ஏராள மான புகார்கள் வந்தன.

அதன்பேரில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பெயரில் செயல்பட்டு வந்த 40 போலி இணையதள முகவரிகளை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த போலி இணையதள முகவரியை தொடங்கி, பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி திருமலை-திருப்பதி தேவஸ் தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரி ஜி.எம்.சந்தீப் திருமலை காவல் துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *