லால்குடியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்

1 Min Read

அரசியல்

திராவிடர் கழக நகர இளைஞரணி சார்பாக மந்திரமா-தந்திரமா நிகழ்ச்சி மற்றும் திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம் லால்குடியில் 17.4.2023 அன்று நடைபெற்றது. லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நிகழ்ச்சியை திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் ஒருங்கிணைத்தார், திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா-தந்திரமா நிகழ்ச்சியை சுமார் ஒன்றரை மணி நேரம் சிறப்பாக நடத்திக் காட்டி பார்த்த மக்களிடையே பகுத்தறிவு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி மந்திரவாதிகள் நடத்தக்கூடிய பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டினார். வெறும் கையிலிருந்து விபூதி கொடுப்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை செயல்மூலம் காட்டினார். ஏராளமானோர் நிகழ்ச்சி முடியும் வரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஒன்றிய செயலாளர் மணிவாசகம், கார்த்திக், சங்கர், சரவணன், சூரிய விஜயமூர்த்தி, ஓரம்போ சுரேஷ், தாரிக் அஜீஸ், நாநீஸ், லோகநாதன், மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக லால்குடி நகர இளைஞரணி தலைவர் அ.ஸ்டான்லி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *