திராவிடர் கழக நகர இளைஞரணி சார்பாக மந்திரமா-தந்திரமா நிகழ்ச்சி மற்றும் திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம் லால்குடியில் 17.4.2023 அன்று நடைபெற்றது. லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நிகழ்ச்சியை திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் ஒருங்கிணைத்தார், திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா-தந்திரமா நிகழ்ச்சியை சுமார் ஒன்றரை மணி நேரம் சிறப்பாக நடத்திக் காட்டி பார்த்த மக்களிடையே பகுத்தறிவு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி மந்திரவாதிகள் நடத்தக்கூடிய பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டினார். வெறும் கையிலிருந்து விபூதி கொடுப்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை செயல்மூலம் காட்டினார். ஏராளமானோர் நிகழ்ச்சி முடியும் வரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஒன்றிய செயலாளர் மணிவாசகம், கார்த்திக், சங்கர், சரவணன், சூரிய விஜயமூர்த்தி, ஓரம்போ சுரேஷ், தாரிக் அஜீஸ், நாநீஸ், லோகநாதன், மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக லால்குடி நகர இளைஞரணி தலைவர் அ.ஸ்டான்லி நன்றி கூறினார்.