தமிழ், தமிழர் சிறப்பு, தமிழர்களின் தோற்றம் – வளர்ச்சி – பண்பாடு தொடர்புடைய ஆய்வுகளைச் செய்த மொழியாராய்ச்சி அறிஞர். குறிப்பாக அவருடைய சொல்லாராய்ச்சி தமிழின் செம்மையைக் காட்டியது; தனித் தமிழுக்கு வளம் கூட்டியது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக இருந்து அவர் ஆற்றிய பணி தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதைச் சான்றுடன் நிறுவியது.
இவரது தமிழப் பணியைப் பாராட்டி, சேலத்தில் 1956-ஆம் ஆண்டு தமிழ்ப் பேரவையின் சார்பில், “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்ற சிறப்புப் பட்டம் தந்தை பெரியாரால் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் மீது பெரும் பற்று கொண்டவர்; தந்தை பெரியாரால் போற்றிப் பாதுகாக்கப்பட்டவரும் கூட!
அவரின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 07)
