Untitled Post

1 Min Read

 பாஜகவுடன் கூட்டணி தற்கொலை முயற்சியே! 

சரத் பவார் கருத்து

‘சாம்னா’வில் சஞ்சய் ராவத் தகவல்

மும்பை, ஏப்.18- மராட்டிய மாநிலத்தில் இப்போது சிவசேனை (ஷிண்டே) -பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி உள்ளது.

இந்நிலையில், சிவசேனை (உத்தவ்) கட்சி பத்திரிகை சாம்னாவில் சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தவ் தாக்கரேவை சரத் பவார் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது, மகாராட்டிர எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில் தனிப்பட்ட நபர்கள் யாரும் தேசியவாத கட்சியில் இருந்து விலகிச் செல்ல விரும்பினால், அது அவர்களது சொந்த விருப்பம். தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் ஒருபோதும் கைகோக்காது என்பது உறுதி. பாஜக வுடன் யாராவது கூட்டணி வைக்க விரும்பினால், அது தற்கொலை முயற்சிதான் என்று சரத்பவார் உத்தவ் தாக்கரேவிடம் கூறியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாராவது பாஜக கூட்டணிக்குச் சென்றாலும், அவர்களுக்கு எதிரான சிபிஅய், அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமே தவிர வழக்கு ஒருபோதும் முடியாது என்றும் சரத்பவார் கூறியதாக சஞ்சய் ராவத் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *