வளர்ச்சிப்பணிகள் எங்கே? பா.ஜ.க. தலைவரை மறித்து கேள்வி எழுப்பிய மக்கள்

1 Min Read

மைசூரு, ஏப்.19 வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் மக்கள் அவரை மறித்து கேள்வி எழுப்பினர்.   கருநாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா போட்டியிடு கிறார். வருணா தொகுதி முக்கிய தொகுதியாக மாறி உள்ளது. அவர்கள் வருணா தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் வீட்டு வசதிதுறை அமைச்சர் வி.சோமண்ணா பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் மக்கள் அவரை மறித்து கேள்வி எழுப்பினர்.தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து மக்கள் அமைச்சர் வி.சோ மண்ணாவிடம் கேள்வி எழுப்பினர். இதனை சிலர் காட்சிப் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது வி.சோமண்ணா காட்சிப் பதிவு மேற்கொள்வதை தடுக்க முயன்றது போன்ற காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *