கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

5.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ‘எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ – எஸ்அய்ஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா முறையீடு: வாக்காளர் தீவிர திருத்த பணி விவகாரத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் நீதி கதறுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு.

* மக்களவையில் பெரும் பரபரப்பு; பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து பெண் எம்பிக்கள் ஆவேசம்: பதில் உரையை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.இந்திய-அமெரிக்க ஒப்பந்தம், எல்லை பிரச்சனை, 8 எம்பிக்கள் இடைநீக்கம் விவகாரம்; உண்மையை கண்டு ஒன்றிய அரசு பயப்படுகிறது: பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போர்க்கொடி.

* துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்யும் விவகாரம் உயர்நீதிமன்றம் விதித்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி வழக்கை ஆறு வாரத்தில் முடிக்கவும் ஆணை.

* நாட்டுப் பாதுகாப்பு குறித்து பேச மோடி அரசு மறுக்கிறது, ராகுல் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒரு கோடி தமிழ்நாட்டு வாக்காளர்கள் உயிருள்ள பிணங்களாக மாறக்கூடும்: எஸ்அய்ஆர் குறித்து கமல்ஹாசன் மாநிலங்களவையில் கன்னிப் பேச்சு. “ஜனநாயக இந்தியா என்ற இந்த மாபெரும் சக்தி தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும்” என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவையை வலியுறுத்தினார்.

தி இந்து:

* மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் இரண்டாம் கட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஜாதி குறித்த கேள்விகள் அறிவிக்கப்படும் என்று திமுக எம்.பி. சல்மாவின் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

* இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக மாபெரும் விவசாயிகள் போராட்டங்கள் வெடிக்கும் என்று மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை.

* டி.என்.டி எனும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அல்லாத சமூகத்தினர் அரசியலமைப்பு அங்கீகாரம், தனி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி டெலிகிராப்:

* ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பேரணிகளை தடுக்கவோ அல்லது கட்சிகளின் பதிவை ரத்து செய்யவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என லக்னோ உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *