அ.தி.மு.க. கூட்டணியில் 65 இடங்களை கேட்கும் பா.ஜ.க. 25 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. திட்டம்?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.4– தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு, 25 தொகுதிகளை ஒதுக்கி சமாதானப்படுத்த அதிமுக திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

65 தொகுதிகள்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 16 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்தது.  அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்துப் போட்டியிட்ட நாடாளுமன்றத் தேர்தலில், 23 தொகுதிகளில் போட்டியிட்டது.  சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்கு கணக்கீட்டில், 59 தொகுதிகளில் இரண்டாவது இடமும், 64 தொகுதிகளில் மூன்றாவது இடமும் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது.

இதனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதாகக் கூறி அதன் தேசியத் தலைமை 65 தொகுதிகளை அதிமுகவிடம் கோரியுள்ளது. உதாரணமாக, மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் கூட்டத்திற்குச் சுமார் 5 லட்சம் பேர் வந்ததாகவும், அதில் 3 லட்சம் பேர் பாஜகவினர் மட்டுமே என்பது கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டுவதாகவும் தலைமை வாதிடுகிறது.

அதிமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கப்படவில்லை என்றாலும், நட்பு ரீதியாகப் பேசும் அதிமுக தலைவர்கள் மூலம் கடந்த முறையை விடச் சற்று கூடுதலாக 25 தொகுதிகளை ஒதுக்க விரும்புவதாகத் தெரிகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *