தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தி.மு.க. மும்முரம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 4- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பக்கம், துணை முதலமைச்சர் உதயநிதி ஒருபக்கம் என தேர்தல் தொடர்பாக தொடர் சர்வேக்களை எடுத்து வரும் நிலையில், முதலமைச்சரின் மருமகன் சபரீசனும் தனது ‘பென்டீம்’ ஆட்கள் மூலம் பிரத்யேக சர்வேக்களை உடனுக்குடன் எடுத்து வருகிறார். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கும் கனிமொழியும் இப்போது தன் வழியில் தேர்தல் சர்வேக்களை எடுத்து வருகிறார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்கள் அடங்கிய தென்மண்டலத்தின் பொறுப்பாளராக இருக்கிறார் திமுக துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி. இந்த மாவட்டங்களில் யாரை நிறுத்தினால் சிரமப்படாமல் ஜெயிக்க முடியும் என்பது குறித்து தனிப்பட்ட முறையில் சர்வே டீமை களத்தில் இறக்கி இருக்கிறார் கனிமொழி.

இந்த 4 தென்மாவட்டங்களிலும் உள்ள 22 தொகுதிகளிலும் சென்னையிலிருந்து வரவழைக்கப் பட்ட சிறப்புக் குழுவினரால் சர்வே நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வெற்றி பெற்றவர்களையே மீண்டும் நிறுத்தலாமா அல்லது ஆளை மாற்றலாமா, கடந்த முறை தோற்றுப் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாமா, புதிதாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த சர்வே முடிவுகளை கட்சி தலைமையிடம் விரைவில் கனிமொழி அளிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் முடிவுகளும் இந்த நான்கு மாவட்ட வேட்பாளர்கள் தேர்வில் முக்கிய பங்காற்றும் என்பதால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *