வல்லம். பிப்.4- தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2026 விழாவையொட்டி தலைக்கவசம், மற்றும் இருக்கைப் பட்டை அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தஞ்சை, கும்பகோணம், பட்டுக் கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் ‘சீட் பெல்ட்’ மற்றும் ‘தலைக்கவசம்’ அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் அனைவரையும் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், கொடியசைத்து தொடங்கிவைத்து உரையாற்றினார்.
சாலைப் பாதுகாப்பு மாதவிழா ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ‘சீட் பெல்ட’ அணிவது ‘தலைக்கவசம்’ அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுடன் பங்கேற்றனர்.
இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி நித்யா மற்றும் காவலர்கள், தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்துப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (50) மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் மற்றும் திட்ட அலுவலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
