இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு: 28,740 காலி பணியிடங்கள்; 10ஆம் வகுப்பு மட்டுமே தகுதி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் 2,009 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் குறித்த முழு விவரங்கள்:

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள 28,740 ‘கிராமின் டாக் சேவக்’ (GDS) – கிராமப்புற பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணியிடங்களும் அடங்கும்.

விண்ணப்பப் பதிவு தொடக்கம்: ஜனவரி 31, 2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026

கட்டணம் செலுத்த கடைசி நேரம்: பிப்.16, 2026 (மாலை 5 மணி வரை)

திருத்தம் செய்யும் காலம்: பிப்ரவரி 18 மற்றும் 19, 2026

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:

கல்வி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எவ்விதத் தேர்வும் கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதிய விவரம்: உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் கிராமின் டாக் சேவக்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை. கிராமின் டாக் சேவக்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.

முக்கிய மாநில வாரியான காலிப் பணியிடங்கள்:

மொத்தம் 28,740 இடங்களில் சில முக்கிய மாநிலங்களின் விவரம்: தமிழ்நாடு: 2,009, கேரளா: 1,691, ஆந்திரப் பிரதேசம்: 1,060, கருநாடகா: 1,023, உத்தரப் பிரதேசம்: 3,169, மகாராட்டிரா: 3,553, மேற்கு வங்காளம்: 2,982.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பிப்ரவரி 18-19 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி திருத்தம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் பட்டியல் பிப்.28-ஆம் தேதி வெளியாகும். அதில் விண்ணப்பதாரரின் பதிவு எண், மதிப்பெண் சதவீதம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *