தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை!

2 Min Read

அரசியல்

கந்தர்வகோட்டை, ஏப்.19 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி மாணவர் ப.லோகேஸ்வரன், அரசு உயர்நிலைப்பள்ளி வேலாடிப்பட்டி மாணவி எ.அபிசா, அரசு உயர்நிலைப் பள்ளி புதுநகர்  மாணவி எம்.மகா லெட்சுமி ஆகியோர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப் பெற்ற தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர் வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந் துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையின் சார் பில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப் புப் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக் கான உதவித்தொகை தேர்வு நடைபெற்று  வருகிறது. இத்தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது.

மன திறன் தேர்வு, படிப்பறிவு திறன்  தேர்வு என இரண்டு வகையாக நடைபெறும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு மாண வர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

 இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். 

இந்தத் உதவித்தொகை சம்பந்தப் பட்ட மாணவர்களின் வங்கி கணக் கில் நேரடியாக செலுத்தப்படும்.

தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒன் பதாம் வகுப்பு முதல் பிளஸ் வரை நான்காண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இத்தேர்வை தமிழ்நாட் டில் 2,22,985 மாணவ, மாணவிகள் எழுதினார். இதில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த மூவர் தேர்ச்சி பெற்று நமது ஒன்றியத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களையும், தேர்வுக்கு பயிற்சி கொடுத்த அனைத்து ஆசிரியர் பெரு மக்களையும் வட்டாரக் கல்வி அலு வலர்கள் வெங்கடேஸ்வரி,  நரசிம் மன், வட்டார வள மய்ய மேற்பார் வையாளர் பொறுப்பு பிரகாஷ்,   புது நகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  அண்ணாதுரை, வேலாடிப்பட்டி தலைமை ஆசிரியர் விஜிலா ஜாய், அக்கச்சிப்பட்டி நடு நிலைப் பள்ளித் தலைமை  ஆசிரியர் தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், கந்தர்வ கோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரக மதுல்லா தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *