ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்குத் தகுதி மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும்! தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை.

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 31- ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு தகுதி மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு 40 சதவீதமாக குறைத்து அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது அரசாணை எண் 23,28.01. 2026 இல் பொது பிரிவினருக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 லிருந்து 50ஆகவும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவிற்கு 40 சதவீதமாகவும் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளது போல மாற்றுத்திறனாளிகள் தேர்வுகளுக்கும் 40 சதவீத மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட வேண்டுமென உரிமையோடு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் துறை அமைச்சர் முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடும், உரிமையோடும் காத்துக் கொண்டுள்ளோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *