தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக மருந்தாளுனர்களை நியமிக்க உத்தரவு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களில், தற்காலிக அடிப்படையில் மருத்துவம் சார்ந்த பணியாளர் களை (Paramedical Staff) நியமிக்க பொது சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1,200 மருந்தாளுனர் பணியிடங்கள் நீண்ட நாட் களாக நிரப்பப்படாமல் உள்ளன.

இதன் காரணமாக, மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து மற்றும் மாத்திரை களை வழங்கும் பணி களை செவிலியர்களே மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவி வந்தது. இது பணிச்சுமையை அதிகரிப் பதாகப் புகார்கள் எழுந் தன.

முன்னதாக, இந்தப் பற் றாக்குறையைச் சமாளிக்க ஒரு மருந்தாளுனர் இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், “ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணியாற்றுவது நடை முறைக்குச் சாத்தியமற்றது” என மருந்தாளுனர்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் இதுகுறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்களில் மாற்றுப் பணியில்  இருக்கும் மருந்தாளுனர்களை உடனடியாக விடுவித்து, அவர்களை மீண்டும் அசல் பணியிடங்களுக்கே அனுப்ப வேண்டும்.

மருந்தாளுனர் பணியிடம் காலியாக உள்ள நிலையங்களில், பொதுமக்களுக்கு தடையின்றி மருந்து வழங்க ஏதுவாக, தற்காலிக அடிப்படையில் மருத்துவம் சார்ந்த பணியாளர்களைப் பணியமர்த்திக் கொள்ள லாம்.

இந்த நடவடிக்கையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து விநியோகம் தடையின்றி நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *