கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் – படத்திறப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 31- கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியினைச் சென் னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மெரினா வளாசப் பவளவிழாக் கலையரங்கில் காலை 10 மணிக்கு நடத்து கின்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உருவப் படத்தினைத் திறந்துவைத்துச் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் நீதியரசர் அரி. பரந்தாமன் அவர்களும், மூத்த பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களும், திராவிடர் கழகப் பிரச் சாரச் செயலாளர் வழக் கறிஞர் அ. அருள்மொழி அவர்களும் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர். மேலும் தி.வேணுகோபால் அவர்களும் கவிஞரின் மகன் மருத்துவர் பாப்லோ நெருடா அவர்களும் கலந்துகொண்டு உரை யாற்றுகின்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கவிதை நினைவேந்தல் நடைபெறவுள்ளது. இதில் கவிஞர் தி. அமிர்தகணே சன், கவிஞர் கவிமுகில், கவிஞர் விழிகள் தி. நடராசன், கவிஞர் தமிழமுதன் ஆகியோர் பங் கேற்கின்றனர்.

நிகழ்ச்சிக்குச் சென் னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்கள் தலைமை தாங்குகின்றார். வரவேற்புரையை முனை வர் வாணி அறிவாளன் அவர்களும் நன்றியுரையை முனைவர் வே. நிர்மலர் செல்வி அவர்களும் ஆற்ற வுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *