அம்பத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அம்பத்தூர், ஜன. 31- அம்பத்தூர் நகரம் புதூரில் தனியாரிடமிருந்து அரசு மீட்டெடுத்த 3.12 ஏக்கர் நிலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டுமென்பது திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும்

29.1.2026 அன்று மாலை 04-00 மணிக்கு அம்பத்தூர் புதூர் பேருந்து நிலையம் அருகில் அம்பத்தூர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம்,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட். விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டி பிஅய். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், பொது நல அமைப்புக்களின் தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன்,திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன்,ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, துணைத்தலைவர் சி.வச்சிரவேல்,பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன்,அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன்,கண்ணன்,முத்துக்குமார்,துரைராவணன், சுந்தர்ராஜன்,மகளிர் அணி தோழர்கள் நதியா,எல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *