ஆசிரியர் விடையளிக்கிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி 1 : சென்னையில் உலக மகளிர் உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அரசின் நலத்திட்டங்களால் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகப் பேசியிருப்பது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாமா?

– வெ.ஜமுனாராணி, ஜாபர்கான்பேட்டை.

பதில் 1 : அதில் என்ன அட்டி? பெருவெற்றி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் அதனால் கூடுதல் பெருமை – சிறப்பு.

  • • •

கேள்வி 2 : கோயில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்துக்கு இணையாகத் தமிழைப் பயன்படுத்த வேண்டும், ஓதுவார்களை யாகசாலைக்குள் உட்கார வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதா?

– எஸ்.பாபு, மதுரை.

பதில் 2 : வரவேற்க வேண்டியதே என்பதில் உங்களுக்கு வியப்போ அல்லது திகைப்போ இருக்கிறதா?

வெறும் வடமொழி மந்திரங்களுக்குப் பதிலாக தமிழ் என்று இடம் பெறாவிட்டாலும் – மூடநம்பிக்கை என்பதெல்லாம் ஒருபுறம் தள்ளி, உரிமைப் பிரச்சினைக் கண்ணோட்டத்தில் ஓதுவார்களையும் உள்ளே உட்கார வைப்பது போன்ற ஆணைகள், சமூக உரிமைகளை மீட்டெடுப்பதில் முதல் கட்ட வெற்றியாகவே கருதப்பட வேண்டும். இதற்குக் காரணமான அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் முயற்சிகளுக்கு – வெற்றிக்கு அவருக்கும் பாராட்டு.

  • • •

கேள்வி 3 :  பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச ராட்லம் மாவட்டத்தில் காதல் இணையரை ஊருக்குள் சேர்க்கமாட்டோம், பால் கூட கிடைக்காது என்று கிராம மக்கள் அறிவித்திருப்பது சட்டப்படி குற்றம் அல்லவா?

– அ.அப்துல்சமத், வேலூர்.

பதில் 3 : சட்டப்படி மட்டுமல்ல, இயற்கை நியதிப்படியும், நியாயப்படியும் குற்றமே! இரட்டை எஞ்சின் ஆட்சியின் யோக்கியதை – நிறம் – திறம் புரிகிறதா இதிலிருந்து?

  • • •

கேள்வி 4 : மேற்கு வங்கத்தில் பாஜகவை முதலமைச்சர் மம்தா மீண்டும் தோற்கடிப்பார் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பேசியிருப்பது எதன் அடிப்படையில்?

– மு.கவுதமன், பெங்களூரு.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 4 : மக்கள் ஆதரவு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சிகள் – அமித்ஷாக்களின் அதீத வன்மந்தான்!

  • • •

கேள்வி 5 : “துணை முதலமைச்சர் உதயநிதியின் ஸநாதனப் பேச்சு 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது – கடந்த 10 ஆண்டுகளாக, திராவிடர் கழகத்தாலும், உதயநிதி சார்ந்த தி.மு.க.வாலும் இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது” என்று  உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– ஜெ.பாபுஜெனார்த்தனன், பொத்தேரி.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 5 : வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்து தேவையற்ற – திட்டமிட்ட கண்டனத்திற்குரியவை. வலிந்து கூறப்பட்டுள்ள சில விசயங்கள் வம்புக்குக்குரியனவாக அமைந்துள்ளன என்பது சட்ட நிபுணர்களின் கருத்தாகும்!

  • • •

கேள்வி 6 :  தேசிய கீதமான ‘ஜன கண மன’ வைப் போல் வந்தே மாதரம் தேசியப் பாடலுக்கும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதை மக்கள் மன்றம் ஏற்றுக்கொள்ளுமா?

– ஏ.பாலகிருஷ்ணன், பாலக்காடு, கேரளா.

பதில் 6 : வந்தே மாதரப் பாடலில், சிறுபான்மை இஸ்லாமியர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் பகுதிகள் உள்ளதாலும், அதை மறைத்து அல்லது விட்டுவிட்டுப் பாடுவது – தேவையற்ற வம்பை உருவாக்குவது போன்றதாகும்!

  • • •

கேள்வி 7 : திருப்பதியில் இனி சாமானிய ஏழை எளிய பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று திடீரென்று தற்போது தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியுள்ளது ஏன்?

– அ.அப்துல் அகத், அய்தராபாத்.

பதில் 7 : திடீரென்று சாமானியர்கள் மீது வந்த கரிசனம் ஏனோ? புரியவில்லை!

  • • •

கேள்வி 8 :  பாஜக ஆளும் உத்தராகாண்டில் பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் இந்து அல்லாதோருக்குத் தடை விதிக்கப் புதிய தீர்மானம் கொண்டுவர இருப்பதாக நிர்வாகக் கமிட்டி கூறியுள்ளதே, இந்திய இறையாண்மை என்னாவது?

– பா.ஆகாஷ், புதுடில்லி.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 8 : இந்திய இறையாண்மை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதே!

  • • •

கேள்வி 9 :  மாநில ஆளுநர்கள் ஒன்றிய அரசுக்குப் பாலமாக இல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் 176ஆவது பிரிவை மீறிச் செயல்படுவது சட்டத்தை மீறும் செயல் ஆகாதா? மாநில அரசுக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தலாமா?

– இ.தனசேகரன், அரூர்.

பதில் 9 : மத்திய – ஒன்றிய அரசு கண்ஜாடை, பச்சைக் கொடியில்லாமல் ஆளுநர்கள் ஒருபோதும் இப்படி நடக்க மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை!

  • • •

கேள்வி 10 : “இந்தியாவில் டபுள் டிஜிட் வளர்ச்சியைப் பதிவு செய்த திராவிட மாடல் ஆட்சிக்கு, எதற்கு டபுள் இன்ஜின்” என்று பிரதமர் மோடிக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருப்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளுமா?

– எஸ்.பத்ரா, வந்தவாசி.

பதில் 10 : உண்மையைச் சொல்லும் துணை முதலமைச்சர் உதயநிதி மீது எரிச்சல்தான் டில்லி “எஜமானர்களுக்கு” வருமே தவிர, உணர்ந்து செயல்படும் பெருமனம் ஒருபோதும் ஏற்படாது!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *