சென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்குச் சிலை!

1 Min Read

முதலமைச்சர் அறிவிப்புக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!

அரசியல்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்குச் சென்னையில் சிலை நிறுவப்படும் என்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் இன்று (20.4.2023) அறிவித்துள் ளதைப் பாராட்டி  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

சென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலை அமைப்போம் என்று நமது முதலமைச்சர் இன்று (20.4.2023) சட்டப்பேரவையில் அறிவித்தது – ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாகும்!

தமிழ்நாட்டை அவர் தனது தாயகமாகவே மதித்தவர்.

சமூகநீதிக்காகவே பத்தே மாதங்களில் பிரதமர் பதவியை இழந்தவர்; அதற்காக வருத்தப்படாமல், பெருமிதப்பட்டு, ‘‘பலமுறை பிரதமர் பதவியை இழக்கத் தயார்” என்று மண்டலுக்கு எதிரான கமண்டலுக்குப் பதில் தந்தவர்!

முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படம் திறந்து வரலாறு படைத்தவர். முத்தமிழறிஞர் கலைஞருடனும், திராவிட இயக்கத்தவரிடமும், நம்மிடமும் தனி அன்பு காட்டிய மாமனிதர்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.4.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *