ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

20.4.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

*ஆங்கில வழிக்கல்வியில் தேர்வு நடத்தினாலும், மாணவர்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் விடை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக் கழகங் களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தல்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் களுக்கும் சலுகைகள், முக்கியமாக இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதற்காக ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற முதலமைச்சரின் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* கோவிட், 2024 மக்களவை தேர்தல் காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் மூன்று ஆண்டுகள் தாமதமாகும் என தகவல்.

* இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி ஜார்க்கண்ட் அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக் காமல், சட்டமன்றத் தலைவருக்கு திருப்பி அனுப்பி யுள்ளார்.

தி இந்து

* ஜாதிக் கணக்கெடுப்பு, தார்மீக ரீதியில் குறைபாடுடை யதாக இருந்தாலும், ஒதுக்கீடு நன்மைகளை இலக்காகக் கொள்ள உதவும் என்கிறது தலையங்க செய்தி.

தி டெலிகிராப்

* 2019 புல்வாமா தாக்குதல் குறித்து நரேந்திர மோடி அரசு பதில் அளிக்க வேண்டும் என்று மம்தா கோரிக்கை.

* யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 10,900 காவல்துறை என்கவுன்டர்களில் 183 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *