சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் தி.மு.க. மாநில மாநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, ஜன.29- சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற தி.மு.க. முன்னாள் உறுப்பினர் பரணிகுமார் இல்ல திருமண விழாதிருச்சியில் நேற்று (29.1.2026) நடை பெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திருச்சியில் தி.மு.க. வளர்வதற்கும், கட்சியின் இருவண்ணக் கொடி பறப்பதற்கும் காரணமாக இருந்தவர்களில் திருச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணனும் ஒருவர். அவர் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன்,  அன்பில் தர்மலிங்கம் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். அவருடைய மகன் பரணிகுமார் என்னோடு 20 ஆண்டுகாலம் பயணித்தவர்.

தி.மு.க. மாநில மாநாடு

தேர்தல் நெருங்கும் வேளையில் மிகவும் பிசியாக இருந்தாலும், பாலகிருஷ்ணன் குடும் பத்தின் மீது உள்ள பாசத்தால் தான் இந்த விழாவுக்கு வந்தி ருக்கிறேன். தேர்தலுக்கு முன் பாக திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் தி.மு.க. மாநில மாநாட்டை அமைச்சர் கே.என்.நேரு நடத்த உள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கேற்ப, மணமக்கள் வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் வாழுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்துப் பேசினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அனைவரையும் வரவேற்றார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க. நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *