பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7.85 லட்சம் நிதி உதவி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.29 தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற் காகவும் மொத்தம் 7.85 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

நிதி உதவி

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அதன டிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக் கட்டளையை தொடங்கி, அந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படுவதுடன்.

வெளிநாடுகளில் நடை பெறும் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் வகையில் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொள் ளவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், தமிழ் நாடு துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (28.1.2026) தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கங்கங்கள் வென்ற தடகள வீரர்கள் ஜ.கோகுலபாண்டியன், வீ.நவீன்குமார் மற்றும் வீராங்கனைகள் ஜா.சுஜி. கா.யாமினி ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக மொத்தம் 1.35 லட்சத்திற்கான காசோ லைகளையும், வில்வித்தை வீரர்கள் ப.சதீஷ்குமார் மற்றும் ர.பிரித்தீஸ்வரன் ஆகியோருக்கு விளையாட்டு ரூபாய்க்கான உபகரணங்கள் வாங்குவதற்காக தலா 1 லட்சம் காசோலைகளையும் வழங்கினார்.

மேலும் பிப்ரவரி 2026இல் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா ரோடு சைக்ளிங் வாகையர் பட்டப் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக சைக்ளிங் வீரர் பி.பிரதீப் புக்கு  செலவீன தொகையாக 2,50,000 ரூபாய்க்கான காசோலையையும், ஆசிய ரோடு சைக்ளிங் வாகையர் பட்டப் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக சைக்ளிங் வீரர் ர.சஞ்சய் அவர்களுக்கு செலவினத் தொகையாக 2,00,000 ரூபாய்க்கான காசோலையையும் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள் க.தீபிகா, சு.பவித்ரா, ம.சுவாதி. அ.தர்ஷினி மற்றும் வீரர்கள் வி.ராஜேஷ், சோ.பரத், செ.அபிதன். உபூந்தமிழன் ஆகியோர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர்சத்யபிரத சாகு  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப் பினர் செயலர்ஜெ. மேகநாத ரெட்டி உள்பட அரசு அலுவ லர்கள், விளையாட்டு வீரர். வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *