சென்னை, ஜன.29 கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மய்யத்தில் உலகளாவிய தமிழாய்வு முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மய்யம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து, தமிழாய்வில் உலகளாவிய புலமையை வலுப்படுத்த இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய தமிழாய்வுக்கான இருக்கையை ஆதரிப்பது, தமிழ்மொழி, அதன் அறிவுசார் மரபுகளுக்கான கல்விசார் அணுகலை வலுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநா் ஜி.சுந்தா் கூறுகையில், தமிழ் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், பன்னாட்டு அளவில் தமிழ் மொழியும், அதன் திறனும் வரும் சந்ததியினருக்கு பகிர உதவும் என்றார்.
