சென்னை, ஜன.29- அடையாறில் கொலை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகாரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடமாநிலத் தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இதற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வதந்தி
சென்னையில் பீகாரைச் சேர்ந்த கவுரவ்குமார் மற்றும் அவரது மனைவி. குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கவுரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் வடமாநிலத் தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம் அதனையொட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
