ஜெயங்கொண்டம், ஜன.29–– முதலமைச்சர் ஆணையின்படி ஒன்றிய அளவிலான ‘இது நம்ம ஆட்டம்’ போட்டிகள் 27.1.2026 அன்று அரசு மாதிரிப் பள்ளியில் எறிபந்து போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது.
அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை தலா 1000/- ரூபாய் என மொத்தம் 8000/- ரூபாய் பெற்றனர்.
போட்டியில் வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் உட்பட பலர் வாழ்த்தினார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் ‘இது நம்ம ஆட்டம்’ 2026 ஆம் ஆண்டிற்கான போட்டிகள்
Leave a Comment
