சென்னை, ஜன.29 தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் சென் னைக்கான வானிலை முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை இருக்கும் என்பதால், பாதுகாப்பு கருதி மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த சில நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
