சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா: கொலிஜியம் பரிந்துரை

1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஏப்.21- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 12.9.2022 அன்று ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்ட நீதிபதி துரைசாமியும் ஓய்வு பெற்றார். அதன்பிறகு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தைக் கவனித்து வரும் நிலையில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாக நியமிக்க கொலிஜியம் பரிந் துரைத்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் 24.5.1962 இல் பிறந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா. 1985 ஆம் ஆண்டு தனது வழக்குரை ஞர் பணியை தொடங்கி சென்ட் ரல் பேங்க் ஆப் இந்தியா, பாம்பே மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி  உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களுக்கு வழக்குரைஞ ராக செயல்பட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு  மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடு தல் நீதிபதி யாக நிய மிக்கப் பட்டு, கடந்த ஆண்டு (2022) மும்பை உயர்நீதி மன்றத் தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுக் கொண்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந் துரைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *