கண்டவர், விண்டவர் யார்? யார்?

1 Min Read

– கேள்வி: கடவுள் இல்லை என்பவர்களைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை என்கிறாரே நடிகர் ரஜினிகாந்த்?

பதில்: கடவுளை நெருக்கத்தில் பார்த்துவிட்டுத் திரும்பியவர் அல்லவா! அவர் சொன்னால் சரியாகத்தான்  இருக்கும்.

‘குமுதம்’, 26.4.2023, பக்கம் 18

ஓ, அப்படியா!

கடவுள் பொம்மையை எல்லோரும்தான் பார்க்கிறார்கள். அர்ச்சகர்கள் தொட்டுக் குளிப்பாட்டக் கூடச் செய்கிறார்கள்! (பெண் கடவுளுக்கும்கூட  ஆண் அர்ச்சகர்கள்).

அந்தக் கடவுள் பேசியதாகவோ, சிரித்ததாகவோ, சாப்பிட்டதாகவோ யாரும் சொன்னதில்லையே!

கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்பதற்கு ரஜினியோ, குமுதமோ விளக்கம் கூறட்டுமே பார்க்கலாம்!

‘‘நட்டக் கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா?”

– சித்தர் சிவவாக்கியர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *