திருவனந்தபுரம்,ஏப்.21- தண்ணீ ருக்கான நிதிநிலை அறிக்கையை தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசும்போது, “கேரளாவில் 44 ஆறுகள், உப்பளங் கழிகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் உள்ளன. கேரளத்தில் நல்ல மழை வளமும் உள்ளது. இருப்பினும் கேரளா தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஒட்டு மொத்த மாநி லத்தின் நீர் இருப்பு குறைந்து வருவதால் இருக்கின்ற வளத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் வீணாவதை தடுக்க பல்வேறு முயற் சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதற்கு இந்த பொது நீர் நிதி நிலை அறிக்கை உதவிகரமாக இருக்கும் என்றார்.