ரூ. 417 கோடியில் கிண்டியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 28- கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.1.2026) அடிக்கல் நாட்டினார்.

குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை

இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-2025ஆம் ஆண்டிற் கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவச் சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, சென்னை கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில், கிங் நோய்தடுப்பு நிலைய வளாகத்தில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில், 4,63,544 சதுர அடி பரப்பளவில் இக்கட்டடம் அமைய உள்ளது. இத்திட்டம் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், நோயுற்ற குழந்தைகளுக்குச் சிறப்புப் பிரிவுச் சிகிச்சைகளை வழங்கும். மேலும்:     குழந்தைப் மருத்துவப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவும். குழந்தை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும். தேசிய மற்றும் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகை செய்யும்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் எ.அருண் தம்புராஜ், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *