சென்னையில் 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப் 21 பீகாரை சேர்ந்த 20-க் கும் மேற்பட்ட குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் ‘பேக்’ (தோல் பைகள்) தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தைத் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு ‘பேக்’ தைக்கும் வேலையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். 

இது குறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், அரசு குழந்தைகள் நல குழுமத்தினர், காவல்துறையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுப் பட்டனர். 

இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள்  மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என் பதும் விசாரணையில் தெரியவந் துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *