ஆவடி மாவட்ட கழக சார்பாக நடைபெற்ற “திராவிடப் பொங்கல் விழா”

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆவடி, ஜன. 27- ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி மகளிர் சார்பில் “திராவிடப் பொங்கல் விழா” 25.1.2026 அன்று மாலை 04-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி தலைமையில் நடைபெற்றது.

கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா இராமதுரை, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகப்பேர் செல்வி, மதுரவாயல் காமாட்சி, ஆவடி கனிமொழி, நந்தினி, எல்லம்மாள், மதுரவாயல் த.லலிதா புவனேஸ்வரி, ப.வசந்தி, மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் அறிவுமதி, அன்புமணி, திருநின்றவூர் ராணி ரகுபதி, க.புஷ்பா, இ.ப.சீர்த்தி, வனிதா, பெரியார் பிஞ்சுகள் கா.ச.அறிவழகி, கா.ச.அன்பழகன், இளந்தென்றல் மணியம்மை, அருள்விழியன், கவின், சீ.ப.மகிழன், கா.யாழினி, கா.சமத்துவமணி, க.இளஞ்சேகுவாரா, க.நன்மொழி, கா.மகிழினி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாலை 06-00 மணிக்கு மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பிஞ்சு சமத்துவமணி கடவுள் மறுப்பு கூற சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

தவிர்க்க முடியாத காரணமாக தள்ளி வைக்கப்பட்ட டிசம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிரியர் பிரச்சாரக் கூட்டம் ஆசிரியர் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நடத்துவது.

பெரியார் உலகத்திற்காக ஆவடி மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட இலக்கை விட அதிக அளவில் நிதி திரட்டி அளிக்க தீவிர முனைப்புடன் ஈடுபடுவது.

2025 ஆண்டுக்கான மாவட்ட கழக வரவு- செலவு மற்றும் ஆவடி மாவட்ட கழக வளர்ச்சி நிதி வரவு- செலவு ஒப்படைக்கப்பட்டது.

ஆவடி மாவட்ட கழக வழக்குரை ஞர் அணி அமைப்பாளராக வழக்குரைஞர் பன்னீர்செல்வம் அவர்களை மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர் துரை அருண் கழகத் தோழர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார்.

திராவிடப் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்திய மகளிர் அணி – மகளிர் பாசறைக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்களை யொட்டி மாவட்ட கழக இளை ஞரணி துணைச் செயலாளர் சென்னகிருட்டிணன், வை.கலை யரசன், அரும்பாக்கம் சா. தாமோதரன், அயப்பாக்கம் அரிகிருட்டிணன், பூந்தமல்லி பகுதி கழக தலைவர் பெரியார் மாணாக்கன், செயலாளர் தி.மணிமாறன், கழக பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன், திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன், ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, க.வனிதா, அன்புமதி, துரைராவணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், துணைத்தலைவர் ஜெயராமன், மாவட்ட கழக துணைத்தலைவர் மு.ரகுபதி ஆகியோர் உரையாற்றிய பின் வழக்குரைஞர் அணி செயலாளர் துரை அருண், மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினர்.

சனவரி மாதம் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கண்ட கழக தோழர்களுக்கு மாவட்ட கழகம் சார்பாக பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.நிகழ்வில் தாம்பரம் ராமச்சந்திரன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞர் அணி அமைப்பாளர் மா.சிலம்பரசன், ச.பசுபதி, கா.சின்னதுரை, துரை, முருகன், தங்க.சரவணன், த.அண்ணாதுரை, ப.வெங்கடேசன், மு.க.பகலவன், மாவட்ட கழக இளைஞர் அணி துணைத்தலைவர் இரா.கலைவேந்தன், புருசோத்தமன் ஆவடி நகர கழக துணைத்தலைவர் சி. வச்சிரவேல் பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், திருமழிசை கார்த்திக், வெள்ளவேடு கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட கழகம் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தை மாவட்ட கழக செயலாளர் க.இளவ ரசன் ஒருங்கிணைக்க இறுதியாக மாவட்ட கழக துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *