தங்கச்சிமடம், ஜன. 26- 24.1.2026 அன்று மாலை ஆறு மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மாவட்ட கழகத் தலைவர் கே.எம்.சிகாமணி தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மு.முருகேசன் வரவேற்று செயலாக்கவுரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரை யாற்றினார். மாவட்ட ப.க.தலைவர் பேரின்பம், மாவட்ட ப.க.செயலாளர் கெவிக்குமார், ஒன்றிய தலைவர் எ.தேவசகாயம், இராமேசுவரம் நகரத் தலைவர் எட்வர்டு, தங்கச்சிமடம் தலைவர் எ.குழந்தைராயர், பரமக்குடி நகரதலைவர் தலைவர் முத்துராமன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜான் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள்.
தீர்மானங்கள்
அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் அருந்தொண்டினை உலகறியச் செய்வதற்கு திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு மாவட்டக் கழகம் சார்பில் ரூ.10 இலட்சம் நிதி திரட்டியளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
இராமநாதபுரத்தில் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கல் விழா, இதுதான் ஆர்.எஸ்.எஸ்.பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற தொடர் பரப்புரை கூட்டத்தை நடத்துவதற்கு தேதியளித்து உதவுமாறு தமிழர் தலைவர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. இராமேசுவரம் நகர செயலாளர் சி.அறிவுச்செல்வன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
