சத்துணவுப் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு மு.வீரபாண்டியன் வரவேற்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.26- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது;-

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசிய போது, சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள் அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.1200 முதல் ரூ.1400 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 17 நாட்களாக தொடந்து போராடி வருகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு, தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் மேலும் மாதம் ரூ.2500 உயர்த்தியும், மே மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடக்கும் போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப் பெண் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் – பணி யாளர்களின் நலனை பிரதிபலிக்கும் விதமாக வெளியிட்ட முதலமைச்சரின் அறிவிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன் ஊரக உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், டாஸ்மாக் பணி யாளர் போன்ற பல துறைகளின் பணியாளர்களும் வலியுறுத்தி வரும் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விரைந்து தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *