தந்தை இறந்த சோகத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

2 Min Read

அரசியல்

திருவொற்றியூர், ஏப் 21- தந்தை இறந்த சோகத்திலும் 10ஆ-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆறுதல் கூறினர். 

திருவொற்றியூர், பெரியமேட்டுப் பாளையம் 1-ஆவது தெருவைச் சேர்ந் தவர் மூர்த்தி (வயது 57). கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு பொற்செல்வி (21), ஜெயலட்சுமி (16) என 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

ஜெயலட்சுமி, திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கிறார். மூர்த்தி தனது மகள் ஜெயலட்சுமியிடம், படித் தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என்று அடிக்கடி கூறி வந்தார். 

தற்போது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. நேற்று (20.4.2023) கடைசி தேர்வு (சமூக அறிவியல்) என்பதால் ஜெய லட்சுமி தேர் வுக்கு தயாராகி வந்தார். 

இந்தநிலையில் ஜெயலட்சுமியின் தந்தை மூர்த்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார். இதனால் கடைசித் தேர்வு எழுத தயாரான ஜெயலட்சுமி நிலை குலைந்தார். தந்தை இறந்த துக்கத்தில் எப்படி தேர்வு எழுத செல்வது? என்று கலங்கினார். எனினும் தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்றும் வகையில் நேற்று காலை சக மாணவிகள் துணை யுடன் ஜெயலட்சுமி துக்கத்திலும் கடைசி தேர்வை எழுத பள்ளிக்கு சென்றார். முன்னதாக தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

மாணவி ஜெயலட்சுமிக்கு அவரு டன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் ஜெயலட்சுமி கடைசித் தேர்வை எழுதினார். இதுபற்றி அவர் கூறும் போது, “எனது தந்தை எப் போதும் படிப்பில் கவனம் செலுத் தும்படி கூறு வார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தேர்வு எழு தினேன்” என்றார். 

நேற்று மாலை மூர்த்தியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. தந்தை இறந்த சோகத்திலும் அவரது ஆசையை நிறை வேற்றும் வகையில் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *