இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொலி உரையை ஒளிபரப்ப தடை! ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்

Viduthalai
4 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ. 6 – ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆங்கிலேயர்  ஆட்சிக் காலத் தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை, காபி, ரப்பர் தோட்டங் கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பிரிட்டிசாருக்குத்  தேவையான விவசாயம் உற்பத்தி சார்ந்த துறைகளில் உழைப்பதற்கா கவும் தமிழ்நாட்டு மக்கள்  வலுக் கட்டாயமாக இலங்கைக்கு கொண்டு போகப் பட்டார்கள்.

தென் தமிழ்நாட்டில்  இருந்த அப்பாவி மக்களை வலுக் கட் டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. இலங்கையில் மலையகத் தமிழர்கள் என்ற பெய ரில் அடையா ளப்படுத்தப்பட்டார் கள்.

புலம் பெயர்ந்த…

பிரிட்டிஷாரால் வலுக்கட்டா யமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம் பெயர்ந்த 200ஆவது ஆண்டு தற் போது கடைப்பிடிக்கப்படுகிறது.

“நாம் 200 ஒற்றுமை பன்முகத் தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங் கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன் னெடுத்தது.

இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவுப் பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த, இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர் கள் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ் நாட்டிலிருந்தும் கலந்து கொள்ள  அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் தமிழ்நாட்டை பூர்வீக மாக கொண்ட  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார் .

அரசின் பங்களிப்புடன்…

இலங்கை அரசின் பங்களிப் புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானா£ல் ஏற்பாடு செய் யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச் சர் ஜீவன் தொண்டமான் வேண்டு கோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மலைகத் தமிழர்களின் Ôநாம் 200Õ விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந் தார்.

அந்த உரையில், “மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற் றியவர்கள் மலையகத் தமிழர்கள்! மலையகத் தமிழ்த் தொழிலாளர் களின் வரலாறு – இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்ப காலம் முதல் தொடங்குகிறது.

1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது.

உழைப்பால் உயர்ந்தவர்கள்

காப்பித் தோட்டங்கள் பெரு கப்பெருக இந்தியத் தொழிலா ளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காப்பி தோட்டத்தையடுத்து தேயி லைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப் பால் உருவானதுதான்.

இலங்கை நாட்டுக்காக தங்க ளது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்க ளது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர் கள்.

“கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர் களின் கண்ணீரால்!” என்று எழு தினார் அறிஞர் அண்ணா. மலை யகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அர வணைத்து தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் குடியமர்த்தி, அரசு ரப் பர் தோட்டங்கள் மூலம் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக் கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில், மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலை நாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கல்விக்கு முக்கியத்துவம்

மலையக தமிழர்களின் குழந் தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங் கையில் வாழும் அனைத்து மக்க ளையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் மேலெழும்பும் காலத்தை எதிர் நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரி மைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக் கும்” என்று முதலமைச்சர் ஸ்டா லின் உரையில்  குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி உரையை ஒளிபரப்பக் கூடாது என்று ஒன் றிய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இன்று வெளியான இந்து ஆங்கில நாளேடு  (6.11.2023) விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் முதலமைச்சரின் காணொலி அந்த விழாவில் ஒளிபரப்பவில்லை.

இவ்வாறு அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *