ஒற்றைப்பத்தி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘கேட்ச் பிடிச்சுக்கோ!’

மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூ, சங்கர மடத்திற்குச் சென்றுள்ளார் (வாழ்க அண்ணா நாமம்).

‘ஆசீர்வாதம்’ என்ற பெயரில், ஆரஞ்சு பழத்தைத் தூக்கிப் போட்டார் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி! அதை செல்லூர் ராஜூவும், அவரது மனைவியும் ‘கேட்ச்’ பிடித்தனர்!

ஒரு மேனாள் அமைச்சராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருந்த ஒருவர், சங்கராச்சாரியாரின் முன்னால் இப்படி பழத்திற்காகக் காத்திருந்து, ‘கேட்ச் பிடிப்பது’ எத்தகைய அவலம்!

பழத்தைக் கையில் கொடுக்காமல், தூக்கிப் போடுவது ஒருவகை தீண்டாமைதானே! மேனாள் அமைச்சராக இருந்தாலும் அவர், ஹிந்து சாஸ்திரப்படி ‘சூத்திரர்’ என்பதால்தான் இப்படி நடத்தப்படுகிறார் என்பதற்கு ஆராய்ச்சித் தேவையா?

செல்லூர் ராஜூ, தலைவராக ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆரும் (முதலமைச்சர்), காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும் பங்கேற்ற நிகழ்ச்சியொன்று சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது (1.7.1981)­.

அப்பொழுதுகூட எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதிலும், ஒரு சால்வையை தானே நேரிடையாகப் போர்த்தாமல், தனது சீடக் கோடி ஒருவர்மூலம் அணிவிக்கச் செய்தார் என்பதை நினைவூட்டுவது இந்த இடத்தில் பொருத்தமானதாகும்.

அதேநேரத்தில், சுப்பிரமணிய சாமி, காஞ்சி மடத்திற்குச் செல்லும்போது, சங்கராச்சாரியாருடன் சரிக்குச் சமமாக ஆசனத்தில் அமர முடிகிறது.

இதற்கு என்ன காரணம் என்பதை அண்ணா பெயரில் உள்ள கட்சியின் (அண்ணா தி.மு.க.) மேனாள் அமைச்சர் அறிவாரா?

காஞ்சிபுரத்தில் தானே அண்ணா இருந்தார்! ஒரே ஒரு தடவையாவது சங்கராச்சாரியார் மடத்தை எட்டிப் பார்த்திருப்பாரா?

‘அண்ணா’ இவர்களுக்கெல்லாம் ஒரு ‘லேபிள்’ அவ்வளவுதான்!

‘அண்ணா நாமம் வாழ்க’ என்று இவர்கள் சொல்லுவது எல்லாம் – ‘‘அண்ணா கொள்கைக்குப் பட்டை நாமம்’’ என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்!

– மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *