புதிய ஓய்வூதியத் திட்டத்தால் 23 ஆண்டு காலப் பிரச்சினைக்குத் தீர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.24-தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்சினைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் 22.1.2026 அன்று குமார பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி (அதிமுக), அரசு ஊழியா்கள், ஆசிரியா் களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அரசு ஊழியா்கள் போராடிக் கொண்டிருப்பதை மிகுந்த கவலையோடு, அக்கறையோடு உறுப்பினா் தங்கமணி இங்கே குறிப்பிட்டிருக்கிறாா். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?

அரசு ஊழியர்கள் கைது

அரசு ஊழியா்கள் கோரிக்கை களை முன்வைத்துப் போராடுவது அவா்களின் உரிமை. எங்களைப் பொருத்தவரை, அந்தப் போராட்டம் தொடரக் கூடாது; முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அவா்களை அமைச்சா்கள் பலமுறை அழைத்துப் பேசினா்.

கோரிக்கைகளை முழுமையாகத் தீா்க்கவில்லை என்றாலும், 95 முதல் 99 சதவீதம் தீா்த்துள்ளோம். ஆனால், எஸ்மா, டெஸ்மா சட்டங்களை திமுக அமல்படுத்தவில்லை. இரவோடு இரவாக அரசு ஊழியா் களை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை. இதெல்லாம் கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்தன.

அதுமட்டுமல்ல, இப்போதைய எதிா்க்கட்சித் தலைவா், முதலமைச்சராக இருந்தபோது அரசு ஊழியா்கள் எந்தெந்த வகையில் ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கிறாா்கள் என்பதை கொச்சைப்படுத்தி பேசியதை எல்லாம் இந்த நாடு மறந்து விடவில்லை.

அரசு ஊழியா்களின் 23 ஆண்டு கால பிரச்சினையை நாங்கள் தீா்த்து வைத்திருக்கிறோம். அரசு ஊழியா் சங்கங்களைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் முதலமைச்சர் அறைக்கு வந்து எனக்கு இனிப்பு ஊட்டிய- நான் அவா்களுக்கு இனிப்பு ஊட்டிய காட்சிகளை ஊடகங்களில் பாா்த்திருப்பீா்கள். அவா்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறாா்கள். அந்த மகிழ்ச்சி உங்களுக்குப் பிடிக்கவில்லை.

அதனால்தான் எதையும் செய்ய வில்லை, எதையும் செய்யவில்லை என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறீா்கள்.

இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. நான் முழுவதையும், நூற்றுக்கு நூறையும் நிறைவேற்றி விட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் ஒன்றிரண்டு சதவீதம் இருக்கிறது.

சத்துணவு அமைப்பாளா்கள், அங்கன்வாடி அமைப்பாளா்கள், பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.அவா்களையும் அவ்வப்போது அழைத்துப் பேசி வருகிறோம். அவா்களுடைய கோரிக்கைகளையும் எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பதை சிந்தித்து, நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் எந்த கவலையும் அடைய வேண்டாம். அடுத்து மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்றாா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *