காலாவதியான 428 சட்டங்களை நீக்கிட பேரவையில் மசோதா தாக்கல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 24- தமிழ் நாட்டில் காலாவதியான, தேவையற்ற 428 சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (23.1.2026) கேள்வி நேரம் முடிந்த பிறகு, 2 மசோதாக்களை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார். ‘தமிழ்நாட்டில் காலாவதியான, தேவையற்ற சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்களை நீக்குமாறு தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துபேசி, பழமையான, வழக்கத்தில் இல்லாத சட்டங்களை நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது’ என்று மசோதாவுக்கான நோக்க காரண உரையில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு கிராம நீதிமன்றங்கள் சட்டம்-1888, தமிழ்நாடு துறைமுகப் பொறுப்பு கழகம் திருத்தச் சட்டம்-1919, தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டுச் சட்டம்-1940 உள்ளிட்ட 428 சட்டங்கள், திருத்தச் சட்டங்களை நீக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரவைக் கூட்டம் நிறைவடையும் நாளில் இந்தமசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *