தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சட்டத் தொகுப்பு வரைவு விதிகள் தயாரிப்பு அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 24- தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படாமல் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொடர்பான வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

சட்டத் தொகுப்பு

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராமச்சந்திரன் பேசும்போது, “ஒன்றிய அரசு தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் 4 சட்டத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளது.

அவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பதிலளித்து கூறியதாவது:

ஒன்றிய அரசு 29 தொழிலாளர் நலச்சட்டங்களை ஒன்றிணைத்து 4 சட்டத் தொகுப்புகளாக அறிமுகப்படுத்தியது. அச்சட்டத் தொகுப்புகள் 21.11.2025 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. அதற்கான வரைவு விதிகளை 30.12.2025 அன்று வெளியிட்டது. தொழிலாளர் நலன்களும், உரிமைகளும் தொழிலாளர் நல வாரியங்களும் பாதிக்கப்படாத வகையில் வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

உறுப்பினர் ராமச்சந்திரன் மேலும் பேசும்போது, தமிழ்நாடு கேரளம், கருநாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக ஒன்றிய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

11.19 சதவீத
பொருளாதார வளர்ச்சி

தமிழ்நாட்டிற்கான நிதி பங்கீட்டை வழங்குவது இல்லை. ஆனாலும், தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அரசு ஊழியர் – ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில், ஊராட்சி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்களையும் இணைக்க வேண்டும்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *