‘காசி தமிழ்ச் சங்கம’த்தின் பின்னணி என்ன?

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘காசி தமிழ்ச் சங்​கமம்’ நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அனுபவம் குறித்து கடிதம் எழு​திய தமிழ்நாடு மாணவருக்கு, பிரதமர் மோடி பாராட்​டுத் தெரி​வித்​துள்​ளார்.

திருச்​செங்​கோட்​டைச் சேர்ந்த மாணவர் பிர​காஷ் பழனிவேல், ஒன்றிய கல்வி அமைச்சகத்​தால் ஏற்பாடு செய்​யப்​பட்ட ‘காசி தமிழ்ச் சங்​கமம்’ நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார். 2025 நவ. 29 முதல் டிச.7 வரை நடை​பெற்ற நிகழ்​வு​களில் பங்​கேற்ற அவர், தனது அனுபவங்​களை பிரதமருக்கு கடித​மாக எழு​தி​யிருந்​தார் (எழுத வைத்திருப்பார்கள்!).

அந்தக் கடிதத்​தில், பழங்​காலத் தமிழ் நாகரி​கத்​தை​யும், காசி​யின் காலத்​தால் அழி​யாத தொன்​மை​யான ஆன்​மிக மரபை​யும் அழகாக இணைத்​து, கருத்து தெரி​வித்​திருந்​தார். மேலும், தொல்​காப்​பி​யம், பார​தி​யாரின் கவிதைகள் ஆகிய​வற்​றில் இருந்​தும் மேற்​கோள் காட்​டி​யிருந்​தார்.

காசியை பாரத மாதா​வின் கழுத்து ஆபரண​மாக​வும், தமிழ்நாட்டை வெள்​ளிக் கொலு​சாக​வும் சித்​தரித்து எழு​தி​யிருந்​தார். இரண்​டும் வெவ்​வேறானவை என்​றாலும், ஒரே ஆன்​மிக உடலின் பிரிக்க முடி​யாத பகு​தி​கள் என்று அவர் குறிப்​பிட்​டிருந்​தார். காசி ஹனு​மான் படித்​துறை​யில், கங்கை நதிக்​கரை​யில் ஒரு மூதாட்​டி​யுடன் ஏற்​பட்ட அமை​தி​யான சந்​திப்பு குறித்​தும் நெகிழ்​வுடன் குறிப்​பிட்​டிருந்​தார். மொழி புரி​யா​விட்​டாலும், தீபம், புன்​னகை, பிரார்த்​தனை மூலம் ஆழமான ஒற்​றுமை உணர்வு ஏற்​பட்​ட​தாக​வும் குறிப்​பிட்​டிருந்​தார்.

‘பக்தி’ என்​பது மொழிக்கு அப்​பாற்​பட்​டது என்​றும், வட இந்​தி​யா​வுக்​கும், தென்​னிந்​தி​யா​வுக்​கும் இடையி​லான ஆழமான பிணைப்​பை இந்​நிகழ்வு பிர​திபலிப்​ப​தாக​வும் அந்த மாணவர் விவரித்​திருந்​தார். அந்​தக் கடிதத்​துக்​குப் பதில் அளித்​துள்ள பிரதமர் நரேந்​திர மோடி, மாணவரின் பயணம் குறித்​தும், காசி​யில் அவருக்கு ஏற்​பட்ட அனுபவங்​கள் குறித்​தும் மகிழ்ச்சி தெரி​வித்​துள்​ளார். மாணவர் பிர​காஷ் இயற்​றிய கவிதை ஆழமாக நெஞ்​சைத் தொடு​கிறது என்​றும் பாராட்​டி​ உள்​ளார் பிரதமர்!

காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்​வு, தமிழ் மொழி, தமிழ்நாட்டின் செழு​மை​யான கலாச்​சா​ரம், காசி​யுட​னான அதன் வரலாற்​றுத் தொடர்பு ஆகிய​வற்​றைக் கொண்​டாடும் துடிப்​பான தளமாக மாறி​யுள்​ளது என்​றும் பிரதமர் குறிப்​பிட்​டுள்​ளார்.

இத்​தகைய பங்​கேற்​பின் மூலம், பிர​காஷ் பழனிவேல் போன்ற மாணவர்​கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உயர்த்​திப் பிடிப்​பவர்​களாக மாறி​யுள்​ளனர் என்று தெரி​வித்​துள்ள பிரதமர், காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்​வில் இளைஞர்​களின் பங்​கேற்​பைப் பாராட்​டி​யுள்​ளார்.

காசி தமிழ்ச் சங்​கமம் மீதான மாணவரின் பற்​றுக்​கும், ஆதர​வுக்​கும் நன்றி தெரி​வித்​துள்ள பிரதமர் மோடி, இது​போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகள், நாடு முழு​வதும் கலாச்​சா​ரப் பிணைப்​பு​களை மேலும் வலுப்படுத்தித் தன்னை ஊக்​கு​விப்​ப​தாக நெகிழ்ச்​சி​யுடன்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

உண்மை என்ன?

காசி – தமிழ்ச் சங்கமத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அதன் நோக்கம் என்னவென்று புரியும்.

2022  நவம்பர்: காலை (5 மணி முதல் 9 வரை) காசி விஸ்வநாதர் தரிசனம், கங்கை ஸ்நானம் மதியம் (12 மணி –3 மணி) ஆன்மிக அமர்வுகள் மாலை (5 மணி முதல் 8 வரை) கோயில் ஆரதி கலை வழிபாடு.

2023 டிசம்பர்: காலை (6 மணி முதல் 10 வரை) கோயில் யாத்திரை, நண்பகல் (11 மணி முதல் 2 மணி வரை) திருக்குறள் – உபநிஷத் உரையாடல்கள்

2025 பிப்ரவரி: காலை (5 மணி முதல் 8 மணி வரை) அகத்தியர் பேரணி, ஷாஹி ஸ்நானம் மதியம் (1 மணி  முதல் 4 வரை) 84 லிங்க யாத்திரை, சித்தர் அமர்வு இரவு (6 மணி முதல் 9 மணி வரை) மகா ஆரதி, பிரார்த்தனை

2025 டிசம்பர்: காலை (6 மணி முதல் 10 மணி வரை) சிறப்புப் பூஜை, தமிழ் வகுப்புகள் மதிய வேளை (12 மணி முதல் 3 மணி வரை) கோயில் தரிசனங்கள்  – உரையாடல்கள்; மாலை (5 மணி முதல் 9 மணி வரை) ஆரதி நிறைவு பிரார்த்தனை

விளக்கம்: ஷாகி ஸ்ஞானம் என்றால் என்ன? – கும்பமேளாவின் முக்கிய நீராடல் நிகழ்வு

ஆரதி என்றால் என்ன? – ஹிந்துக் கோவில்களில் வழங்கப்படும் ‘புனித’ வழிபாட்டு முறையாகும். இதில்   பூக்கள், தூபம், தேய்பிறை ஆகியவற்றால் தெய்வத்தைச் சுற்றி வலம் வந்து அர்ச்சனை செய்வது இது பக்தர்களின் பாவங்களை நீக்கி, ஆன்மிக சுத்திகரிப்பை அளிப்பதாகும்.

– இதுதான் காசி தமிழ்ச் சங்கமத்தின் செயல்பாடுகள்! ஒன்றிய அரசு தனி ரயில் ஏற்பாடு செய்து, தமிழ்நாட்டிலிருந்து பக்தர்களை அழைத்துச் செல்லுகிறது. 8 நாட்கள் முதல் 15 நாட்கள் வரைகூட நடப்பது உண்டாம்.

நடந்த நிகழ்ச்சி நிரல்களைக் கவனித்தாலே இதன் பின்னணியில் சங்பரிவாரின் திட்டம் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது!

பக்தியும், ஆன்மிகமும் தானே அவர்களின் போதை மாத்திரைகள்!

ஒப்புக்குச் சப்பானி என்பதுபோல் இடையே ‘திருக்குறள்’, ‘தமிழ்’ என்று வைத்துள்ளனர். அப்படியே திருக்குறளை சொல்லிக் கொடுத் தாலும் பரிமேலழகர் சொன்னதுபோல் தானிருக்கும்.

‘‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழிதலும் ஆகும். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்’’ என்பது தானே பரிமேலழகரின் உரை.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறும் திருக்குறளும், பிறப்பில் பேதம் பேசும் மனுதர்மமும் ஒன்றாகுமா?

பிஜேபியைச் சேர்ந்த மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் தருண்விஜய் 2016ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் கங்கை நதிக் கரையில்  திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தாரே! அந்த சிலையின் நிலை தற்போது என்ன? சிலையை வைக்கத் திட்டமிட்டபோது உள்ளூர் சாதுக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தற்போது தற்காலிகமாக பொதுப் பணித்துறை (டேம் கோதி கெஸ்ட் ஹவுஸ்) அலுவலகத்தில் கறுப்புப் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறதே!

காசி தமிழ்ச்சங்கமம் மூலம் தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள ஆன்மிகக் கலாச்சாரத்தைப் புதுப்பிக்க முன்னின்று முயற்சி செய்யும் பிரதமர் மோடி மனம் வைத்தால் அந்தத் திருவள்ளுவர் சிலையைப் பொருத்தமான இடத்தில் நிறுவ முடியாதா?

காசி தமிழ்ச் சங்கமம் என்பதெல்லாம் அசல் ஏமாற்று வித்தை. பார்ப்பனீயக் கலாச்சாரத்தைத் தமிழர்கள் தலையில் கட்ட செய்யப்பட்ட சூழ்ச்சிதான்!

யாரோ ஒரு தமிழ்நாடு மாணவன் காசி தமிழ்ச்சங்கமம் பற்றி ‘ஆகா ஊகா’ என்று எழுதிய ஒரு கடிதத்தைப்  (எழுத வைக்கப் பட்ட கடிதத்தை) பெரிதுபடுத்தி ஒரு பிரதமர் தூக்கி நிறுத்துவதன் நோக்கம் எல்லாம் வடக்கு ஆன்மிகக் கலாச்சாரத்தை தமிழர்களின் மண்டைக்குள் திணிப்பதுதான்!

எச்சரிக்கை!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *