அய்.அய்.டி.களில் மாணவர்கள் தற்கொலைகள் ஏன்?

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 65 அய்.அய்.டி. மாணவர்கள் தற்கொலை!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அய்.அய்.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டடத்தின் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த மாணவர் அங்கு புவி அறிவியலில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்த ராஜஸ்தானை சேர்ந்த ராமஸ்வரூப் இஷ்வாராம் (25) என அடையாளம் காணப்பட்டார்.

அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

முன்னதாக இதே வளாகத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பி.டெக். மாணவர் ஜே. சிங் மீனா கடந்த டிசம்பர் 29 அன்று தற்கொலை செய்த நிலையில் தற்போது மற்ெறாரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள அய்.அய்.டிகளில் 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 முதல் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் அய்.அய்.டி-யில் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத் தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 36 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மன அழுத்தம், கல்விக் கட்டணச் சுமை, ஜாதிப் பாகுபாடு ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன.

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ஜாதிப் பாகுபாடு புகார்கள் 118% அதிகரித்துள்ளதாக யுஜிசி அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

2016-ஆம் ஆண்டு ஜாதியப் பாகுபாட்டால் அய்தராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தது.

ஜாதியப் பாகுபாடு காரணமாகத் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல் வெட்கப்படத்தக்தாகும்.

அய்.அய்.டி. நிறுவனங்களில் பேராசிரியர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருப்பதால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அவமதிப்பதும் ஓர்ந்து கண்ணோட்டம் செலுத்துவதும்தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

அய்.அய்.டி.யில் நடக்கும் தற்கொலைகள்பற்றி பல முறை சர்ச்சைகள் ஏற்பட்டு, உயர்நீதிமன்றமேகூட எச்சரித்தும் பார்ப்பன ஆதிக்கப் புரியாக உள்ள
அய்.அய்.டி. அசைந்து கொடுப்பதில்லை.

அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக (கல்வி) இருந்த அர்ஜுன் சிங் எச்சரித்ததுண்டு (12.2.2008).

ஆனால், அதைப்பற்றியெல்லாம் தனிப் பார்ப்பன சாம்ராஜ்ஜியம் நடத்திவரும் அய்.அய்.டி.கள் காதில் போட்டுக் கொள்வதில்லை.

தற்கொலை செய்து கொண்ட மாணவர்களைப்பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், ஒளிப்படக் கலைஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து ‘தினமணி’ ஏடே கண்டித்ததுண்டு!

சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர் வசந்தா கந்தசாமி  அவர்கள் பணிபுரிந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘ரிட்’ மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை எஸ். நாகமுத்து அவர்கள், 1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணிநியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்திட வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டதுண்டு (26.7.2013).

சென்னை அய்.அய்.டி.யில் மட்டுமல்ல; கான்பூர் அய்.்அய்.டி.யில் மட்டும் தற்கொலைகளில் 30 விழுக்காடு நடக்கிறது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இவ்வளவு நடந்தும், அதுகுறித்து அக்கறை செலுத்தாதது ஏன்?

அதுவும் சமூகநீதி என்றால் நவீன ‘தீண்டத்தகாத’ ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சித் தேவை. சமூகநீதியில் நம்பிக்கையுள்ளவர்கள் கவனத்திற்கும் இதனை கொண்டு வருகிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *