சென்னை, ஏப்.22- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 3 ஆயிரத்து 354 வீடுகள் தகுதி யற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
2021 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் – ஊரகம் அமலாக்கம் மீதான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் செயலாக்கத் தணிக்கை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத் தில் நேற்று (21.4.2023) வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநிலமுதன்மை கணக்காயர் (தணிக்கை-1) நெடுஞ்செழியன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக் கான கணக்காயர் (தணிக்கை- 2) ஆனந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
செயலாக்கத் தணிக்கை அறிக்கை விவரங்கள்
அவர்கள் அளித்த செயலாக்கத் தணிக்கை அறிக்கை விவரங்கள் வருமாறு:-
2016-2021 வரையிலான காலத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு வெறும் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டன. மானியம் பெறுவதற்கான ஒன்றிய அரசின் நிபந்தனை களை முழுமை யாக நிறைவேற்றாததால், ஒன்றிய அரசின் ரூ.1,515.60 கோடி நிதியுதவியை உரிய நேரத்தில் தமிழ்நாடு அரசால் பெற முடியவில்லை. ஊரக வளர்ச்சி இயக்குநர் விளம்பரங்களுக்கும் திட்டத்துடன் தொடர்பற்ற பிறவற்றுக்கும் நிர்வாக நிதியிலிருந்து ரூ.2.18 கோடி செலவு செய்துள்ளார்.
குறைபாட்டை தவறாகப் பயன்படுத்தி…
திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடி யினர் குடும்பங்களுக்கு என இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீதம் வீடுகளை எட்ட முடியவில்லை. பெரும்பாலான தாழ்த் தப்பட்ட, பழங்குடியின குடும்பங்கள் சரியான காரணமின்றி சமூக, பொருளாதார மற்றும் ஜாதிக் கணக்கெடுப்பு தரவு தளத்தில் இருந்து அகற்றப்பட்டன. பயனாளியை அடையாளம் காண பயன்படுத்தும் சமூக, பொருளாதார மற்றும் ஜாதிக் கணக்கெடுப்பு தரவில் பல குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவரின் பெயர் ‘தெரியாது’ என்று குறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாட்டை தவறாகப் பயன்படுத்தி, பெருமளவில் வீடுகள் வழங் குவதில் முறைகேடு நடந்துள்ளது. ‘தெரியாது’ என்ற உள்ளீட்டை தவறாகப் பயன்படுத்தி மொத்தம் 3 ஆயிரத்து 354 வீடுகள், பயனா ளியாகத் தகுதியற்றோருக்கு முறைகேடாக ரூ.50.28 கோடி செலவில் வழங்கப்பட்டன.
பல முரண்பாடுகள்
மாநில அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டால், முறைகேடாக அனுமதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். வங்கி கணக்கில் ‘தெரியாது’ என்று உள்ளீடு கொண்ட பெயர் தரப்படாத பயனாளிகள் பெயரில் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப் பட்டு, உதவித்தொகை வழங்குவதற்காக வேறு குடும்பங்களைச் சேர்ந்த நபர்களின் வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. தகுதி யான பயனாளிகள் பெயரில் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால் உதவித்தொகையானது தகுதியற்ற நபர்களின் வங்கி கணக்குகளுடன் மோசடியாக வழங் கப்பட்டது. 2021 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, ஒப்பளிப்பு அளிக்கப்பட்ட 5.09 லட்சம் வீடுகளில் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டிருந்தன. பெரு மளவில் களஆய்வுப் பதிவுகள் நேர்மையற்ற முறையில் கையாளப்பட்டுள்ளன. புவிசார் குறியீடு முறையில் மற்றும் வீட்டின் ஒளிப் படங்களின் நேர முத்திரையில் பல முரண் பாடுகள் இருப்பது தணிக்கையின்போது கண்டறியப்பட்டது.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.