தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக புவி தினம்

Viduthalai
2 Min Read

மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு கொண்டாட்டம்!

அரசியல்

கந்தர்வக்கோட்டை, ஏப்.22 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அரசு உயர்நிலைப்பள்ளி விடுதியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துக்குமார் தலைமை வகித்தார்.  பள்ளியின் கணித ஆசிரியர் முத்துராமன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர் வக்கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா கலந்துகொண்டு உலக புவி தினம் குறித்து பேசியதாவது 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் அய்க்கிய நாடுகள் மன்றம் மூலம் உலக புவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு புவி தினத்தின் கரும்பொருள் “எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்” என்பதாகும்.   இப்புவி தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண் டாடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது. இது பூமி ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளிமண்டலத்தை வழங்குகிறது என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது. மேலும் அதை நம்மை கவனித்துக்கொள்வது போல் நாம் அதை கவனித்துக்கொள்வது முக்கியம் இந்த நாளின் முக்கிய நோக்கம் புவிக்கோள்  எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதன் நிலையை மேம்படுத்த நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவ தாகும்.

எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, கார்பனை வெளியேற்றும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்கள், மிதிவண்டி களைப் பயன்படுத்துவது, பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப் பைகளை உபயோகிப்பது, மரங்களை நடுவது, மறு சுழற்சி செய்த பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள்மூலம் இயற்கையை பாது காத்திட முடியும். பசுமையான, வளமானதாக இந்த பூமியை மாற்ற அரசாங்கமும், பொது மக்களும் செயல்பட வேண்டியது அவசிய மான ஒன்றாகும். எனவே இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களோடு நாமும் ஒன்றிணைந்து, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க முயற்சிப்போம். இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் நமது பூமியின் இயற்கை வளங்களை நம்முடைய சந்ததியினருக்கு அளிக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட இணைச் செயலாளர் துரையரசன் பேசும்போது, காடுகள் அழிப்பு, வன விலங்குகளை வேட்டையாடுவது, மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகளவிலான பாலித் தீன் பயன்பாடு, மட்காத பொருட்களை மண்ணில் வீசுவது, நிலக்கரி, கச்சா எண்ணெய் பயன்பாடு போன்ற பல செயல்பாடுகளால் இயற்கையின் சமநிலைப் பாதிக்கப்படுகிறது. நிலத்தில் அதிகளவிலான பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால் நிலம் மலடாகிறது. கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக காற்று மாசுபடுவதுடன், பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு, இயற்கை பேரழிவுகள், குடிநீர் பற்றாக்குறை, பலவிதமான நோய்கள் உண் டாகின்றன. எனவே நாம் இயற்கையை பாதுகாக்க அதிக அளவில் மரங்களை நட்டு சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் பசுமைப்படை, சுற்றுச் சூழல் மன்றம், அறிவியல் மன்ற மாணவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் அறிவியல் இயக்க வட்டார துணைத் தலைவர் சண்முகம், ஆசிரியர்கள் யோவேல், சத்தியபாமா உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

நிறைவாக ஆசிரியர் சரவணமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *