தமிழ்நாட்டில் சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.22 செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நட வடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும் என்று மாவட்ட சுகா தார அதிகாரிகளுக்குப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

சிக்குன் குனியா

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகச் சிக்குன்குனியா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்குப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

“சிக்குன்குனியா பாதிப்பு இருப்பதால், உரிய கண்காணிப்புடன் கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள், ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன்குனியா பரிசோதனைகளை மேற்கொண்டு நோய் பரவலைத் தடுக்க வேண்டும். டெங்கு அல்லது சிக்குன்குனியாவுக்குச் சிகிச்சை தரத் தனி வார்டு அமைக்க வேண்டும். பாதிப்பைக் கண்டறியும் எலிசா (ELISA) பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்களை இருப்பில் வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வீடு தோறும் கொசு உற்பத்தியைக் கண்காணிப்பதற்கான பணியில் போதிய நபர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏடிஸ் கொசுக்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். சிக்குன்குனியா பாதித்தால் காய்ச்சல், மூட்டு வலி, அதீத தசை வலி, உடல் அசதி அறிகுறிகள் ஏற்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *