இனி பாடங்களை செயல்முறையில் கற்கலாம்… மாணவர்கள், ஆசிரியர்களுக்கான மாநில வளமய்யம் திறப்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த சிறப்பு முன்னெடுப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநில வளமய்யம் சென்னையில் நேற்று (21.1.2026) திறக்கப்பட்டது. மாணவர்கள் வகுப்பறையில் கற்றல் மட்டுமின்றி, அதனை நேரடியாக வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில வளமய்யம் திறப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் அடுத்த அத்தியாகமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் – கற்பித்தை மேம்படுத்தும் வகையில் மாநில வளமய்யம் நேற்று (ஜனவரி 21) திறக்கப்பட்டது. சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மய்யத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இதன் மூலம் பள்ளி மாணவர்களுக் கான கற்றலை ஊக்குவிக்கும் முக்கிய அடையாளத்தை தமிழ்நாடு உருவாக்கி யுள்ளது. தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட இந்த மய்யம், வரும் காலங்களில் மாவட்ட வாரியாக அமைக்கப்படவும் வழிவகை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மாநில வளமய்யம் என்றால் என்ன, அதனின் நோக்கம், மாணவர்களுக்கு எப்படி உதவும் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மாநில வளமய்யம் என்றால் என்ன?

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025இன் அடிப்படையில் மாணவர்கள் வகுப்பறை கற்றல் மட்டுமின்றி, அவர்களுக்கான செயல்முறை அனுபவத்துடன் கூடிய ஒரு கற்பித்தல் முறையை அணுகும் வகையில், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில் மாநில வளமய்யம் அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நிறைவு அடைந்து தற்போது சென்னையில் இந்த மய்யம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பீட்டில் இந்த மய்யம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

இம்மய்யத்தின் முக்கிய நோக்கம், நவீன உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைக்கு ஏற்ப கற்றல்- கற்பித்தல் உத்திகளை ஆய்வின் மூலம் அணுகுவது ஆகும். இந்த ஆய்வின் மூலம் வகுப்பறை கற்றலுக்கு தேவையான பரிந்துரைகள் அளிப்பது, வகுப்பறை கற்றல் உத்திகளை காட்சிபடுத்துவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்றுக்கொள்ளும் வகையில் ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்டவை இந்த மய்யத்தின் முதன்மய்யான நோக்கங்கள் ஆகும்.

இதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது, பணியிடை பயிற்சியின்போது ஆசிரியர்கள் செய்து கற்பதற்கான வாய்பளிப்பது, புதிய அணுகுமுறை சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கல்விசார் செயல்பாடுகளை இந்த மய்யத்தில் திட்டமிடப்படுகிறது.

மய்யத்தில் என்னென்ன உள்ளன?

மொழி ஆய்வகம்

அறிவியல் மற்றும் கணிதத்திற்கு தனித்தனி அரங்குகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறை

கணக்கீட்டு சார் சிந்தனையை செழுமைப்படுத்தும் அரங்கு

கற்க கசடற என்ற பெயரில் மாணவர்கள் தாங்களே சோதனை செய்து கற்றுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இணையவழி கருத்தரங்குகள்

பயிற்சி பட்டறைகள்

கலந்துரையாடல் நிகழ்வுகள்

துறைசார் வல்லுநர்களின் சொற்பொழிவுகள்

கல்விச் சுற்றுலா

கல்விச் சுற்றுலா

இந்த மய்யத்தை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக முன்பதிவு செய்துகொண்டு ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த மய்யத்தை நேரடியாக பார்வையிட்டு கற்றல் அனுபவத்தை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *