பெரியார் உலக நிதிக்கு கணிசமாக நிதி வழங்க முடிவு சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சோழிங்கநல்லூர், ஜன. 22- சோழிங்கநல்லூர் மாவட் டத்தின் கலந்துரையாடல் கூட்டம் 18.1.2026 அன்று காலை 11 மணியளவில் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா.தே. வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

இரா. தே. வீரபத்திரன் கடவுள் மறுப்புக் கூறி புதிதாக நிர்வாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட தோழர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

செங்கை மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுநிறைவு விழா மாநாட்டிற்கு நன்கொடைகள் திரட்டித்தந்து மாவட்டம் இரண்டாம் இடம் பிடிக்க    உறுதுணையாக இருந்த மாவட்ட காப்பாளர் நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன்,  மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு மற்றும் பகுத்தறிவாளக் கழக ஆனந்தன் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் தமிழினியன் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

பின்னர் மும்பை மாநாட்டு சிறப்புகளைத் தலைவர் வேலூர் பாண்டு விளக்கி மும்பை மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

மறைந்த சென்னை மண்டலத்தலைவர் தி.இரா.இரத்தினசாமி மற்றும் ஆதிலட்சுமி அம்மையார் அவர்களின் சிறப்பினை எடுத்துக்கூறி வரும் 8.02.2026 அன்று பெரியார் திடலில் நடைபெறும் இருவரின் படத் திறப்புவிழாவிற்கு அனைவரும் செல்லவேண்டும் என்றார்.

துணைத் தலைவர் இரா.கலைச்செல்வன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

தீர்மானங்கள்.

புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த் துகளைத் தெரிவிக்கிறது

பெரியார் உலக நிதிக்கு கணிசமாக நிதி வழங்குவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தி.இரா.இரத்தினசாமி – ஆதிலட்சுமி அம்மையார் படத் திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்வது எனத் தீர் மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *