மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,ஏப்.22- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதத்தில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேசன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசா ரணை நடத்தியது.
தொடர்ந்து அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘ஒன்றிய அரசின் ‘இ-ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட (கிட்டத்தட்ட 28 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்) அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் குடும்ப அட்டைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழங்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் அவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இ-ஷ்ரம் போர்ட் டலில் பதிவுசெய்யப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்குதல் தொடர்பாக பொது விளம்பரம் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற வற்றை காரணம் காட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை களை மறுக்க முடியாது’ என்று உத்தர விட்டது.
கரோனா அதிகரிப்பு எச்சரிக்கை
தமிழ்நாடு உள்ளிட்ட
8 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை கடிதம்
புதுடில்லி,ஏப்.22- கரோனா தொற்று அதிகரிப்பு தொடர்பாக தமிழ்நாடு, டில்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, கருநாடகம் உள்ளிட்ட 8 மாநிலங் களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அதில், கரோனா பரிசோதனையை இன்னும் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் 4.7% ஆக இருந்த தினசரி பாதிப்பு, நடப்பு வாரத்தில் 5.5%ஆக அதிகரித் துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக கரோனா பாதிப்பு அதி கரித்து வருகிறது. தற்போது தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின் றனர்.