அறிவியல் குறுஞ்செய்திகள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கரோனா முடக்க காலத்தில், நகரப் பறவைகளின் அலகுகள் வேகமாக மாற்றமடைந்திருப்பதை கலிபோர்னியா பல்கலை. ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த இரண்டு ஆண்டுகளில், மனிதர்கள் வீசும் உணவுக்கழிவுகள் குறையவே, பறவைகளின் இரையில் நேர்ந்த மாற்றத் தினாலேயே, இந்தப் பரிணாம மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலை. ஆய்வாளர்கள் தாவரத் திசுக்களுக்குள் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை நேரடியாகச் செலுத்தும் ‘நுண் ஊசிப் பட்டை’யை உருவாக்கியுள்ளனர். கரையும் தன்மை கொண்ட இது, உரங்களின் தேவையை குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் பயிர் விளைச்சலை அதிகப்படுத்தும்.

ஜெர்மனியின் பிரான்ஹோபர் ஆய்வகம், ஈறுகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் புதிய பற்பசையை உருவாக்கியுள்ளது. இது வாயிலுள்ள நன்மை செய்யும் கிருமிகளைக் கொல்வதில்லை. மாறாக, வாயிலுள்ள நுண்ணுயிரிச் சூழலில் சமநிலையைப் பேணி, நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

சுவிட்சர்லாந்தின் இ.பி. எப்.எல்., விஞ்ஞானிகள், பெரும் தரவு மய்யங்களின் உதவியின்றி, கருவி களிலேயே நேரடியாக இயங்கும் ஏ.அய்., அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது ஏ.அய்., இயங்குவதற்கான மின்சாரம், தண்ணீர் தேவையை பெருமளவு குறைத்து, அவை உண்டாக்கும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் குறைக்கும்.

தீவிர மன அழுத்தத்தைச் சீர்செய்யும் வகையில், வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய ‘ஹெட்செட்’ ஒன்றுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து வாரியம் அனுமதியளித்துள்ளது. இந்தக் கருவி, மூளையின் முன்பகுதிக்கு லேசான மின்சாரத் தூண்டுதலை அளிக்கிறது. மருந்துகளைத் தவிர்த்து, மருத்துவக் கண்காணிப்புடன் இக்கருவியை பயன்படுத்தலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *