புரிந்துகொள்வீர் புவி வெப்பமயமாதலை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிரீன்லாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ப்ருதோ பனிச்சிகரத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆழ்துளை ஆய்வு, ஓர் அதிரடி உண்மையைத் வெளிப்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 500 மீட்டர் ஆழம் துளையிட்டு ஆய்வு செய்ததில், இந்த மாபெரும் பனிச்சிகரம் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக மறைந்து போயிருந்தது தெரியவந்துள்ளது.

‘கிரீன் ட்ரில்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், நவீன கருவிகள் மூலம் பனிப்பாறைகளுக்கு அடியில் உள்ள படிமங்களைச் சேகரித்தனர். ஒளிர்வுக் காலக் கணிப்பு (லுமினசென்ஸ் டேட்டிங்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் படிமங்களை ஆய்வு செய்தனர். அதில் அவற்றின் மீது ஒரு காலத்தில் பனிக்கவசமில்லாமல், நேரடியாக சூரிய ஒளி பட்டிருந்தது உறுதியானது.

ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வெப்பநிலையானது, இன்றைய வெப்பநிலையை விட மிகச் சிறிய அளவே அதிகமாக இருந்தது. ஆனால், அந்தச் சிறிய மாற்றமே ஒட்டுமொத்தப் பனிச்சிகரத்தையும் கரைத்துவிட்டது. இது, கிரீன்லாந்தின் பனிப்பரப்பு, விஞ்ஞானிகள் கணித்திருந்ததைவிட வெப்பத்தால் மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடியது என்பதைக் காட்டுகிறது.

புவி வெப்பமயமாதல் தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், இந்த ஆதி கால நிகழ்வு மீண்டும் நிகழக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். கிரீன்லாந்தின் பனிப்பகுதிகள் உருகுவது உலகளாவிய கடல் மட்டத்தை உயர்த்தி, கடலோர நகரங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும். கடந்த காலத்தில் நடந்த இந்த நிகழ்வு, எதிர்காலக் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *